ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தன்று வெளியான படம் தான் 'சார்லி'. பார்வதி கதாநாயகியாக நடித்திருந்த இந்தப்படத்தை மார்ட்டின் பரக்கத் என்பவர் இயக்கியிருந்தார். படம் சூப்பர் ஹிட்டாகி வெற்றி பெற்றதோடு நூறாவது நாள் விழாவையும் கொண்டாடியது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு வந்தவர்கள் அனைவரும் படத்தையும் அதன் மேக்கிங்கையும் துல்கர் மற்றும் பார்வதியின் நடிப்பையும் ஆஹா ஓஹோவென புகழ்ந்தார்களே தவிர படத்தின் கதையை மற்ற யாருரிடமும் கோர்வையாக சொல்ல அவர்களுக்கு வரவில்லை.
காரணம் இது ஆர்ட் பிலிம் வகையை சேர்ந்தது. கதையாக சொல்ல முடியாமல் படமாக பார்க்கும்போது தான் புரிந்துகொள்ள முடியும். படத்தின் கதையை மார்ட்டின் பரக்கத்தும் இயக்குனர் ஆர்.உன்னியும் துல்கரிடம் சொன்னபோது அவருக்கும் இந்த சந்தேகம் தான் ஏற்பட்டது. ஆனால் மார்ட்டின் பரக்கத் ஏற்கனவே தன்னை வைத்து 'ஏபிசிடி' என்கிற ஹிட் படத்தை கொடுத்திருந்ததால் அவர் மீதுள்ள நம்பிக்கையில் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டாராம் துல்கர். ஆனால் படமாக பார்த்தபோதுதான் தான் சந்தேகப்பட்டது எவ்வளவு தவறு என தனக்கு தெரியவந்ததாக படத்தின் நூறாவது நாளில் குறிப்பிட்டுள்ளார் துல்கர் சல்மான்.