'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இதுநாள் வரை ரசிகர்கள் ஸ்டைலிஷாக பார்த்து பழகிய துல்கர் சல்மான் படம் முழுவதும் வேட்டி அணிந்தபடி வந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் லுக் கொடுக்க உள்ளார். இதற்கு முன் 'ஞான்' மற்றும் சார்லி' ஆகிய படங்களில் வேட்டி கட்டி அவர் நடித்திருந்தாலும் இதில் கிராமத்தில் உள்ள படித்த இளைஞனாக வருவதால் படம் முழுவதும் வேட்டி தான் அணிகிறாராம் துல்கர்.. தற்போது அமல் நீரைத் இயக்கவுள்ள புதிய படத்தில் தான் இந்த கெட்டப்பில் வலம் வர இருக்கிறார் துல்கர். மம்முட்டியை வைத்து 'பிக் பி' படம் மூலம் இயக்குனராக மாறிய அமல் நீரத், இப்போது துல்கர் சல்மானை வைத்து தான் தனது அடுத்த படத்தை இயக்கப்போகிறார்.
ஏற்கனவே 'அஞ்சு சுந்தரிகள்' என்கிற ஆந்தாலாஜி படத்தின் (குறும்படங்களை ஒருங்கிணைத்த படம்) ஐந்து எபிசோடுகளில் 'குள்ளண்டே பார்யா' என்கிற குறும்படத்தில் துல்கரை வைத்து இயக்கியிருந்தார் அமல் நீரத். அமல் நீரத் மலையாள சினிமாவில் அருமையான ஒரு ஒளிப்பதிவாளர் மட்டுமல்ல, திறமையான இயக்குனரும் கூட. அதனால் தான் மலையாளத்தில் நடிக்கலாமா என்று யோசித்த பிரகாஷ்ராஜே கூட இவர் இயக்கிய 'அன்வர்' படத்தில் நடித்துக்கொடுத்தார். கடந்த வருடம் இவர் இயக்கத்தில் வெளியான 'அயூப்பிண்டே புஸ்தகம்' பாசிடிவ் விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது..