பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
எந்த ஒரு படத்தையும் சென்சார் சான்றிதழ் இல்லாமல் தியேட்டர்களில் திரையிட முடியாது என்பது நடைமுறையில் உள்ள சட்டம். ஆனால் பாபி சிம்ஹா நடித்துள்ள 'மெட்ரோ' படத்திற்கு தணிக்கை குழுவினர் எந்த ஒரு ஒரு சான்றிதழையும் தர மறுத்துள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது தங்கம் தொடர்பான பெண்களுக்கு எதிரான குற்றங்களை மையமாக வைத்து மெட்ரோ என்கிற பெயரில் ஒரு படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தை இயக்கியுள்ளார் ஆனந்த கிருஷ்ணன். இவர் ஏற்கெனவே ஆள் படம் மூலம் ஊடகங்களின் பரவலான கவனத்தையும் பாராட்டுகளையும் பெற்றவர் தான்.
கதையின் நாயகனாக புதுமுகம் சிரிஷ் நடித்துள்ளார் .நாயகியாக மாயா நடித்துள்ளார். தேசியவிருது பெற்ற பாபிசிம்ஹா இதில் செயின் பறிக்கும் கும்பலுக்கெல்லாம் தலைவனாக, வில்லனாக மிரட்டியுள்ளார். செயின்பறிப்பு, தங்கம் சம்பந்தமான திருட்டுகளின் பின்னால் உள்ள நெட்ஒர்க், எது? இதில் ஈடுபடும் இன்றைய இளைஞர்களின் மனப்பான்மை சமூக நடத்தை எப்படி உள்ளது என எல்லாவற்றையும் அலசுகிறதாம் இந்தப்படம். ஆனால் இந்தப்படத்தில் வன்முறை காட்சிகள் அனுமதிக்காப்பட்ட அளவையும் தாண்டி உள்ளதால் U/A அல்லது A சான்றிதழ் கூட தரமுடியாது என சென்சார் போர்டு மறுத்துவிட்டதாம்.
படக்குழுவினரோ, சென்சார் ஏதாவது காட்சிகளை நீக்கும்படி சொன்னால் அதை நீக்குவதற்கு தயாராக இருந்தும் கூட, எந்த சான்றிதழையும் தர மறுத்துவிட்டதாம் சென்சார் போர்டு. இதனால் மும்பையில் உள்ள சென்சார் ரிவைசிங் கமிட்டிக்கு படத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளார்களாம் படக்குழுவினர். இதற்கு முன் நாம் பல வன்முறை படங்களை A சான்றிதழுடன் பார்த்து இருக்கிறோம்.. அவற்றில் பல கொடூரமான வன்முறைகளை கொண்டவைதான். அதையெல்லாம் விட இந்த 'மெட்ரோ'வில் அப்படி என்ன வன்முறை இருக்கப்போகிறது என படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரிக்கவே செய்துள்ளதாம்