தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாள நடிகர் ஜினு ஜோசப், மிகப்பெரிய நடிகர் இல்லாவிட்டாலும் கூட ஓரளவு ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் நடிகர்தான்.. சில தினங்களுக்கு முன் இவர் நியூயார்க்கில் இருந்து அபுதாபிக்கு ஒரு தனியார் விமானத்தில் சென்றுள்ளார்... எகனாமி வகுப்பில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்த அவர், தனது இருக்கைக்கு முனே ஓடும் டிவியை அணைக்க சொல்லியுள்ளார்.. ஆனால் விமான பணியாளரோ அதை அணைக்காமல் ஒரு துணியை கொண்டு மறைத்துள்ளனர்..
இதனால் அதிருப்தி அடைந்த ஜினு ஜோசப், பணியாளர்களின் பேச்சுக்களையும் அவர்களது செயல்பாட்டையும் வீடியோ எடுக்க ஆரம்பித்துள்ளார். கடுப்பான விமான ஊழியர்கள் அவரிடம் இருந்த வீடியோவை கைப்பற்றியதோடு விமானம் தரையிறங்கியதும் ஏர்போர்ட்டிலேயே அவர் கைது செய்யப்படுவார் என அவரை மிரட்டவும் செய்துள்ளார்கள்.. சொன்னபடியே ஏர்போர்ட்டில் வைத்து கைதும் செய்யப்பட்டார் ஜினு ஜோசப்.
பின்னர் ஒருவழியாக விசாரணையில் தனது தரப்பு நியாயங்களை எடுத்துரைத்து விடுதலையாகி கொச்சி திரும்பியுள்ளார் ஜினு ஜோசப். இந்த சம்பவம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு வீடியோவுடன் ,நடந்தது என்ன என டீடெய்லாக பதிவிட்டும் உள்ளார். ஆனால் சம்பந்தப்பட்ட விமான சேவை அதிகாரிகளோ, ஜினு ஜோசப் தங்களிடம் தரக்குறைவாக நடந்துகொண்டதால் தான் கைது செய்யப்பட்டார் என்றும், அதன்பின் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டு அதை கைப்பட எழுதியும் கொடுத்தபின்னர் தான் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.