ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன், குணச்சித்திர நடிகர் தான் சித்திக். எப்படி நம்ம ஊரில் ரஜினிக்கும், கமலுக்கும் நாசர் அவ்வளவு பிரண்டோ, அதே அளவு மோகன்லால், மம்முட்டி இருவருக்குமே திக் பிரண்ட் தான் இந்த சித்திக். மலையாள சினிமாவின் நாசர் என்று கூட சொல்லலாம் இவரை. கடந்த 30 வருடங்களாக மலையாள சினிமாவில் நடித்துவரும் இவர் கிட்டத்தட்ட 300 படங்களில் நடித்துவிட்டார்.. கடந்த வருடம் வெளியான மம்முட்டி நடித்த 'பத்தேமாறி' படத்தில் இவரது மாலுமி கதாபாத்திரம் சித்திக்கிற்கு ரொம்பவே நல்ல பெயர் வாங்கி தந்தது.
இருந்தாலும் மலையாளம் தவிர மற்ற மொழிகளில் நடிப்பதில் ஆர்வம் காட்டாத இவரை, 12 வருடங்களுக்கு முன் தமிழில் அஜித்தை வைத்து தான் இயக்கிய 'ஜனா' படத்தின் மூலம் தமிழுக்கு அழைத்து வந்தார் மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ். ஆனால் அதன்பின் ஏனோ இவர் தமிழில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. தற்போது 12 வருடங்கள் கழித்து இன்னொரு மலையாள இயக்குனரான டி.கே.ராஜீவ்குமார் மூலம், கமலுடன் 'சபாஷ் நாயுடு' படத்தில் இணைந்து நடிப்பதற்காக மீண்டும் தமிழுக்கு வந்துள்ளார் சித்திக். இன்ற காலை நடைபெற்ற இந்தப்படத்தின் பூஜையிலும் உற்சாகமாக கலந்துகொண்டார் சித்திக்.