ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
நாணி இயக்குனர் ஹனு ரகவபுடி இயக்கத்தில் நடித்த கிரிஷ்னகாடி வீர ப்ரேம காத எனும் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 14 ரீல்ஸ் எண்டர்டையின்மென்ட் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் பாலகிருஷ்ணாவின் ரசிகராக நாணி நடித்திருந்தார். படம் ஆரம்பிக்கும் முன்னரே டைட்டில் கார்டில் மகேஷ் பாபு மற்றும் பாலகிருஷ்ணாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
பாலகிருஷ்ணாவின் புகைப்படங்கள் மற்றும் வசனங்களை பயன்படுத்தி கைதட்டல் வாங்கியதற்காகதான், பாலகிருஷ்ணாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டதாக ஒரு சாரர் கூறினாலும் மகேஷ் பாபுவிற்கும் இப்படத்திற்கும் என்ன சம்மந்தம் என கேள்வி எழுந்தது. அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. அதாவது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான 14 ரீல்ஸ் எண்டர்டையின்மென்ட் நிறுவனத்திற்கு மகேஷ் பாபு டூகுடு, நம்பர் 1, ஆகடு போன்ற படங்கள் நடித்துக் கொடுத்துள்ளார்.
இதில் டூகுடு மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற படங்கள் பெரும் தோல்வியைச் சந்தித்தன. இதற்காக மகேஷ் பாபு வெளியில் தெரியாமல் அந்நிறுவனத்திற்கு நஷ்டஈடு வழங்கியுள்ளாராம். மேலும் கிரிஷ்னகாடி வீர ப்ரேம காத படத்தின் பாடல்கள் வெளியீட்டில் கலந்து கொண்ட மகேஷ் பாபு 14 ரீல்ஸ் எண்டர்டையின்மென்ட் நிறுவனம் தனது சொந்த நிறுவனம் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.