சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி |
பாகுபலி படத்தின் மூலம் உலக புகழ்பெற்ற இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி நிலமோசடி வழக்கில் சிக்கி உள்ளார். பிரபல தெலுங்குபடத் தயாரிப்பாளர் புவனேஸ்வர் என்பவர் ஆந்திர மாநிலம் ராம்பல்லி நீதிமன்றத்தில் ராஜமவுலி மீது நிலமோசடி வழக்கு தொடர்ந்துள்ளார் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:
ஐதராபாத், பஞ்சாராஹில்ஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கீழ் தளத்தில் உள்ள தனது வீட்டை ராஜமவுலி விற்க முன்வந்தார், அதனை நான் 42 லட்சம் ரூபாய்க்கு வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டு 2.7 லட்சம் முன் பணமாக கொடுத்தேன். அதன் பிறகுதான் அந்த வீடு சட்டவிரோதமாக கட்டப்பட்டு இருப்பதும், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ராஜமவுலியிடம் கேட்டபோது அவர் எதுவும் சொல்லாமல் வேறொருவருக்கு வீட்டை விற்று விட்டார். எனது பணத்தை மோசடி செய்துவிட்டார். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் இதுகுறித்து ராஜமவுலி வருகிற 24ந் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. அதோடு ராஜமவுலி நேரில் ஆஜராகவும் சம்மன் அனுப்பியது.