தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் ஜோதிகாவிற்கு ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக '36 வயதினிலே' படத்தை இயக்கி வெற்றியை ருசித்த கையோடு மீண்டும் மலையாள திரையுலகிற்கே திரும்பிவிட்டார் இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ்.. அடுத்ததாக அவர் பிருத்விராஜ் அல்லது மோகன்லால் படத்தை இயக்கப்போவதாகத்தான் இதுநாள் வரை செய்திகள் வெளியாகி வந்தன. அவரும் இந்த இருவருக்குமான கதைகளை தயாராக வைத்திருந்தாலும், அவர் தமிழுக்கு வந்துசென்ற அந்த இடைப்பட்ட காலத்தில் வேறு சில இயக்குனர்களின் படங்களில் இந்த இரண்டு நடிகர்களும் தொடர்ந்து கமிட்டாகி நடித்து வருகின்றனர். அதனால் இந்த இருவரையும் இயக்கும் திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு புதிய கதையை கையில் எடுத்துள்ளார் ரோஷன் ஆண்ட்ரூஸ்...
ரோஷனின் ஆஸ்தான கதாசிரியர்களான பாபி-சஞ்சய் இரட்டையர்தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார்கள். படத்திற்கு 'ஸ்கூல் பஸ்' என பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் கதாநாயகனாக, அவரது முந்தைய படமான ''ஹவ் ஓல்டு ஆர் யூ' ஹீரோ குஞ்சாக்கோ போபனே நடிக்கிறார். இதில் அவருக்கு ஸ்கூல் பஸ் ட்ரைவர் வேடமாம்.. தனியார் பள்ளியில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாகவும் இன்றைய கல்விமுறையின் அவலத்தை தோலுரிப்பதாகவும் கமர்ஷியல் பாணியில் இந்தப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்படுகிறது. படம் ஹிட்டாச்சு என்றால் ரோஷன் ஆண்ட்ரூஸ் இதை தமிழுக்கும் கொண்டுவருவார் என நம்புவோம்.