ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
மலையாள சினிமாவில் பிரபல வில்லன் பீமன் ரகு. 300க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாகவே நடித்துள்ளார். அவர் நிஜ வாழ்க்கையிலும் வில்லனாக நடந்து கொண்டதால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பீமன் ரகு தனது நண்பர்களுடன் காரில் திருவனந்தபுரத்தை சுற்றி வந்தார். அப்போது ஒரு ஐஸ் கிரீம் கடையின் முன் காரை நிறுத்திவிட்டு கடைக்காரரிடம் ஐஸ் கிரீம் கொண்டு வரச் சொன்னார். கடைக்கு வெளியே ஐஸ் கிரீம் சப்ளை செய்யும் வழக்கம் அந்தக் கடைக்கு இல்லை. இதனை அவரிடம் கடைக்காரர் கூறியிருக்கிறார். வந்திருப்பவர் சினிமா நடிகர் என்பதால் விதியை தளர்த்தி கடைக்காரர் காருக்கு ஐஸ்கிரீம் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார். பீமன் ரகு மீண்டும் மீண்டும் கொண்டு வரச் சொன்னதால் கடைக்காரர் மறுத்திருக்கிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பீமன் ரகுவும், அவரது நண்பரும் கடைக்காரர் ஸ்ரீஜேசை கடுமையாக தாக்கிவிட்டுச் சென்று விட்டனர். படுகாயம் அடைந்த கடைக்காரர் ஸ்ரீஜேஸ் மருத்துவமனையி சேர்க்கப்பட்டார். பின்னர் அவர் வட்டியூர்காவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து போலீசார், பீமன் ரகு மற்றும் அவரது நண்பர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.