டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தான் செய்யும் செயல்கள் மூலம் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்களிடமாவது அந்த செயல் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என தெரிந்தால் தயங்காமல் அதில் இறங்கிவிடுவார் மோகன்லால். கடந்த சில மாதங்களுக்கு முன் அநாதை சிறுவர்கள் இல்லத்திற்கு சென்ற மோகன்லால் அங்கிருந்த குழந்தைகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கி அவர்களை மகிழ்வித்தார். இப்போது சில தினங்களுக்கு முன் திருவனந்தரபுரத்தில் உள்ள பூஜப்புரா பெண்கள் முதியோர் இல்லத்திற்கு சென்று அங்கிருந்த 45 தாய்மார்களுக்கு புடவை உள்ளிட்ட துணிகளை வழங்கி அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.
'அவருக்காய் நமக்கு வாங்காம்' என்கிற நிகழ்ச்சிக்காக கிராண்ட் கேரளா ஷாப்பிங் பெஸ்டிவல் சீசன்-9 உடன் மோகன்லாலும் இணைந்து இந்த உதவியை செய்துள்ளார்கள்.. முதியோர் இல்லத்தில் இருந்த தாய்மார்களுடன் நிறைய நேரம் செலவிட்ட மோகன்லால், அங்கே தனது தாயின் பெருமைகளையும் அவர்களிடம் பகிர்ந்துகொண்டதோடு தற்போது அவர் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் படுத்தபடி சிகிச்சை பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அங்குள்ள தாய்மார்களை பார்க்கும்போது தனது தாயை பார்க்கும் உணர்வே ஏற்பட்டது என்றும் அவர்களிடம் கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது குறித்து மோகன்லாலிடம் கேட்டபோது, “இன்றைய நாகரிக, அவசர உலகில், பெரியவர்களை உதாசீனப்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் இதுபோன்ற நிகழ்ச்சி தேவையான ஒன்றுதான்.. நமக்காக சிலவற்றை செய்யும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விட மற்றவர்களுக்காக சிறிய அளவில் உதவி செய்தாலும் அதில் கிடைக்கும் சந்தோசம் அளவற்றது.. இதை பார்க்கும் மற்றவர்களும் இவர்கள் போன்றவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டவேண்டும் என்பதற்காகவே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன்” என கூறியுள்ளார் மோகன்லால்.