இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தெலுங்கு திரை உலகின் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் படங்களைக் காட்டிலும் அவரது ஒளிமறைவில்லாத கருத்துக்களாலே அதிகம் பேசப்படுகின்றார். ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள அட்டாக், கில்லிங் வீரப்பன் போன்ற படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர தயாரகி விட்டன. இந்நிலையில் கில்லிங் வீரப்பன் படத்திற்கான புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம் கோபால் வர்மா, தெலுங்கு திரை உலகின் பிரபல நட்சத்திர சகோதரர்களான சிரஞ்சீவி மற்றும் பவன் கல்யாண் குறித்து பேசியுள்ளார். பவன் கல்யாணை நல்ல மனிதர் என்ற முறையிலேயே தனக்கு பிடிக்கும் என்றும் ஆனால் ஒரு நடிகராக அவரை பிடிக்காது என்றும் ராம் கோபால் கூறியுள்ளார்.
மேலும் சிரஞ்சீவியை நடிகராக மட்டுமே பிடிக்கும் என்று கூறியுள்ள ராம் கோபால், தான் சிரஞ்சீவியின் தீவிர ரசிகன் என்று தெரிவித்துள்ளார். சிரஞ்சீவியின் அனைத்து படங்களையும் பார்த்து விட்டதாகவும் ராம் கோபால் கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் சிரஞ்சீவியின் 151வது படத்தைக் காண ஆவலுடன் இருப்பதாகக் கூறியுள்ள ராம் கோபால், சிரஞ்சீவி ப்ரூஸ் லீ படத்தில் நடித்து விட்டதால் அடுத்து அவர் நடிக்கவிருக்கும் படத்தை 151வது படம் என்றே கூறுமாறு மீடியாக்களுக்கும் ராம் கோபால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.