பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
யூகங்கள், அனுமானங்கள் என எதற்கும் வேலை வைக்காமல் நேரடியாக தானே முன்வந்து, மிகுந்த புளகாங்கிதத்துடன் தனது பட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிருத்விராஜ். சமகால இளைஞாக நடித்துவரும் பிருத்விராஜ், இந்தப்படத்தில் 300 வருட காலத்திற்கு முந்தைய சரித்திர வீரனாக இந்தப்படத்தில் நடிக்க இருக்கிறார். படத்தின் பெயர் 'குஞ்சிரக்கோட்டு காளி'. இதில் காளியாகத்தான் நடிக்கிறார் பிருத்விராஜ். யார் இந்த காளி..? அவரைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமானால் வேநாட்டின் தளபதியான இரவிக்குட்டி பிள்ளையை பற்றியும் தெரிந்துகொண்டுதான் ஆகவேண்டும்.
“தற்போது கொல்லம் பகுதியாக இருப்பதுதான் 1600ஆம் வருடங்களில் வேநாடு எனப்பட்டது. இதன் தன்னிகரில்லா தளபதியாக இருந்த இரவிக்குட்டி பிள்ளை, அவரது விசுவாசமான போர்வீரனான குஞ்சிரக்கோட்டு காளி, மற்றும் இன்னும் ஆயிரமாயிரம் தியாகிகளை பற்றிய வீர வரலாறு இன்னும் நம்மில் பலருக்கு தெரியாமலேயே இருக்கிறது. அவர்களது வீரம், தியாகம், நாட்டுப்பற்று ஆகியவை பற்றிய கதைப்பாடல்கள் இருக்கின்றன. வேநாடு மண்ணின் வீரத்தை பறைசாற்றும் இந்த கதையில் நான் காளியாக நடிக்கிறேன்” என பெருமிதத்துடன் அறிவித்துள்ளார் பிருத்விராஜ். ஏற்கனவே 'உருமி' படத்திலும் கூட இப்படிப்பட்ட வரலாற்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிருத்விராஜ்.