தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெயர்தான் மலையாள சினிமா.. ஆனால் கமர்ஷியல் படங்கள் அனைத்திலும் பத்தில் இருந்து முப்பது சதவீதமத்திற்கு குறையாமல் தமிழ் வசனங்களோ அல்லது தமிழ் நடிகர்களை பற்றிய காட்சிகளோ இல்லாமல் மலையாள சினிமா வெளியாவதில்லை.. மலையாள படங்களை தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கு இது நன்றாகத்தெரியும். அந்த வகையில் மலையாள நடிகரும், பிருத்விராஜின் சகோதரருமான இந்திரஜித் 'தளபதி' என்கிற பட்டத்துக்கு சொந்தக்காரராக மாறிய சுவாரஸ்யமான நிகழ்வை ஒரு படத்தில் காட்சியாக வைத்துள்ளார்கள்.
கடந்த வெள்ளியன்று மலையாளத்தில் வெளியான 'அமர் அக்பர் அந்தோணி' படத்தில் பிருத்விராஜ், இந்திரஜித், ஜெயசூர்யா மூவரும் ஹீரோக்களாக நடித்திருகிறார்கள். இதில் அந்தோணியாக நடித்துள்ள இந்திரஜித் கதைப்படி, ஒரு சினிமா தியேட்டரில் ரஜினி நடித்த 'தளபதி' படம் ஓடிக்கொண்டு இருக்கும்போது தியேட்டரிலேயே பிறந்தவராம். அதனால் அவரை பிருத்விராஜ் உட்பட அனைவரும் அவரை தளபதி என்றே அழைப்பதாக காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல, தளபதி படத்தில் இருந்து ரஜினியின் கிளிப்பிங் கட்சிகளும் பின்னணியில் சிறிது நேரம் காட்டப்படுகிறது. இத்தனைக்கும் அந்தப்படத்தில் மம்முட்டி நடித்திருந்தாலும் கூட அவரை பற்றிய பேச்சும் காட்சிகளும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.