'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமாவில் சில விஷயங்கள் யதார்த்தமாக சுவாரஸ்யமாக நடந்துவிடும்.. நமக்கு கேட்பதற்கு சிரிப்பாக இருந்தாலும் கூட அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு சங்கடம், சந்தோசம் இரண்டுமே கலந்திருக்கும் என்பதுதான் உண்மை. மலையாள நடிகர் பிருத்விராஜுக்கும் இந்த இரண்டு அனுபவங்களுமே ஏற்பட்டுள்ளன. உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த பாக்கியவாங்களில் பிருத்விராஜும் ஒருவர் அல்லவா..? ஐந்து வருடங்களுக்கு முன் ராவணன் படத்தில் அவருடன் நடித்தபோது, “நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது இருந்து உங்களின் தீவிர ரசிகன்” என ஐஸ்வர்யாவிடம் சொல்லி சந்தோஷப்பட்டார் பிருத்விராஜ்.
அவருக்குத்தான் அது சந்தோசம்.. ஆனால் தன்னை விட பத்துவயது குறைந்த பிருத்விராஜுடன் ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்யா அதைக்கேட்டு சங்கடத்தில் ஆழ்ந்துவிட்டாராம். ஆனால் இதேபோன்ற சங்கடம் பிருத்விராஜுக்கும் ஏற்பட்டது. சில தினங்களுக்கு முன் பிருத்விராஜ் நடித்துள்ள 'அமர் அக்பர் ஆண்டனி' படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போதுதான் இந்த விஷயத்தையும் அவர் வெளிப்படுத்தினார்.
இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள நமீதா பிரமோத் தான் மூன்றாவது படிக்கும்போது இருந்து பிருத்விராஜின் ரசிகை அவரிடம் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினாராம்.. உண்மைதான். பிருத்விராஜை விட 13 வயது குறைந்தவர் நமீதா.
அடுத்து பிருத்விராஜ் பேசும்போது இதைக்குறிப்பிட்டு, “நமீதா சொன்னதை கேட்டதும் எனக்கு கொஞ்சம் ஷாக்காகத்தான் இருந்தது. என்னடா நமக்கு அவ்வளவு வயசு ஆகிவிட்டதா என்று. ஆனால் நானும் இதே போல ஐஸ்வர்யா ராயிடம் சொன்னபோது அவரது மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை இப்போது யூகிக்க முடிகிறது” என்றார்