ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வெப்பம்,நான் ஈ போன்ற படங்களில் நடிதுள்ள தெலுங்கு நடிகர் நானி அண்மையில் நடித்த பலே பலே மகாதேவோ சிறப்பான வெற்றி பெற்றது. இந்நிலையில் பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கும் படத்தில் நானி நடிக்கவுள்ளதாக பேச்சு அடிபடுகின்றது. துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் நடிப்பில் மணிரத்னம் இயக்கிய ஒகே கண்மணி திரைப்படம் வெளிவந்து வெற்றிப் படமாக அமைந்தது. ஓகே கண்மணி படம் ஓகே பங்காரம் என்ற தலைப்பில் தெலுங்கில் வெளியாகி அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது. அப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் அடுத்த படத்தில் துல்கர் சல்மான்,கார்த்தி,நித்யா மேனன்,கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் துல்கர் சல்மான் மலையாளப் படங்களில் பிசியாக இருப்பதால் அவர் இப்படத்தில் நடிக்க மாட்டார் என சில நாட்களாக தகவல்கள் உலா வருகின்றன. துல்கர் கதாபாத்திரத்தில் நடிகர் நானி நடிக்கவிருப்பதாக தற்போது டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஓகே பங்காரம் படத்தில் துல்கருக்கு நானி தான் பின்னணி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.