விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறி கட்டியது என்கிற பழமொழி போல கேரள அரசு தெருநாய்களை கொல்லவேண்டும் என் நிறைவேற்றிய தீர்மானத்தை பாலிவுட் நடிகையான சன்னி லியோன் கடுமையாக விமர்சித்திருப்பது மிக மிக விசித்திரமானது. கேரளாவின் பல நகரங்களில் உள்ள முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தெருநாய்களின் தொல்லை. பொதுமக்களில் பலர் வெறிநாய் கடியால் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். அவற்றால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக, அரசின் தீர்மானப்படி நகராட்சியினர் தற்போது தெருநாய்களை கூட்டம் கூட்டமாக பிடித்து கொன்று வருகின்றனர். இதற்கு பொதுமக்களிடம் ஓரளவு ஆதரவு இருந்தாலும் சிலபக்கம் இருந்து எதிர்ப்பும் கிளம்பியது.
மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் தெருநாய்கள் கொல்லப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவை அப்படி உருவாக நாமே காரணம் என்பதையும் சமீபத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். நடிகைகள் லட்சுமிராய், ரஞ்சனி ஹரிதாஸ், உட்பட பலர் தெருநாய்களை கொல்லக்கூடாது என தங்களது எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர். இப்போது சன்னி லியோனும் மும்பையில் இருந்துகொண்டு கேரள அரசின் தீர்மானத்தை விமர்சித்திருக்கிறார்.. “நாய்களை கொல்வதன் மூலம் சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கையை இன்னும் அதிகரிக்க முடியும் என நம்புவது மிகவும் பயங்கரமான ஒன்று.. நாய்களும் நம்மைப்போல உயிர்கள் தானே.. அதை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமை” என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் சன்னி லியோன்..