ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
இங்கே நம் தமிழ்சினிமாவை பொறுத்தவரை, தமிழ் சேனல்கள் நம் படங்களின் சாட்டிலைட் ரைட்ஸை வாங்க தயக்கம் காட்டிவருவதால் சேனல்களுக்கு பலவித கட்டுப்பாடுகளை தயாரிப்பாளர் சங்கத்தினர் விதித்து வருகிறார்கள்.. ஆனால் கேரளாவிலோ சமீபத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான 'என்னு நிண்டே மொய்தீன்' படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை கைப்பற்ற சேனல்களுக்குள் கடும் போட்டி நடைபெற்று வருகிறது. குறிப்பாக சூர்யா, ஆசியாநெட், மழவில் மனோரமா ஆகிய மூன்று சேனல்கள் தான் இந்தப்படத்தின் ரைட்ஸை கைப்பற்றுவதில் முனைப்பு காட்டி வருகின்றனவாம்.
இதற்கு முந்தைய பிளாக் பஸ்டர் ஹிட்டான 'பிரேமம்' படத்தை ஆசியாநெட் சேனல் கிட்டத்தட்ட 6 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக சொல்லப்படுகிறது.. இதனால் மற்ற இரு சேனல்களும் இதை தங்களது கௌரவ பிரச்சனையாக எடுத்துக்கொண்டுள்ளனவாம். ஆனால் இப்போது 'என்னு நிண்டே மொய்தீன்' படத்திற்கு அதைவிட அதிக விலை சொல்லப்படுவதாக தகவல். காரணம் வரும் நாட்களில், ஏற்கனவே 'த்ரிஷ்யம் கலெக்சனை முறியடித்த 'பிரேமம்' பட கலெக்சனையும் இந்தப்படம் முறியடித்துவிடும் வாய்ப்பு இருக்கிறதாம்.
பொதுவாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு மட்டும் இந்த விலை கொடுக்கப்படும். ஆனால் இந்தப்படம் வெளியான 12 நாட்களில் கேரளாவில் மட்டும் 13 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிபிடத்தக்கது. கேரளா தவிர மற்ற மாநிலங்களில் அக்-1ஆம் தேதிக்குப்பின் தான் இந்தப்படம் வெளியாகி இருப்பதால் அவற்றின் வசூலும் சேரும்போது அது மிகப்பெரிய தொகையாக வந்து நிற்கும் என கணக்கு போடுகிறார்கள் படத்தயாரிப்பாளர்கள்.