'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
டெம்பர் படத்தின் அதிரடி வெற்றிக்கு பின்னர் நடிகர் ஜுனியர் என்.டி.ஆர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நன்னுக்கு பிரேமதோ என்ற படத்தில் ஸ்டைல் ஹீரோவாக நடித்து வருகின்றார். நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் இப்படத்தில் நாயகியாக நடிக்கின்றார்.பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் 80% படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகின்றன. இதனால் இப்படத்தின் தயாரிப்பு செலவு திட்டமிட்டதை விட அதிகரித்து விட்டதாம்.
இந்நிலையில் மேலும் தயாரிப்பாளருக்கு செலவு வைக்காமல் ஜூனியர் என்.டி.ஆர் நடந்து கொள்வது குறித்து இயக்குனர் பெருமையுடன் கூறியுள்ளார். பொதுவாக ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் நடிகர்கள் தங்கும் போது ஜூனியர் என்.டி.ஆர் தயாரிப்பு செலவை மிச்சப்படுத்தும் விதமாக படக்குழுவினர் தங்கியுள்ள ஹோட்டலிலேயே தானும் தங்கியுள்ளார். நாயகன் அந்தஸ்தை விடுத்து தங்களுடன் ஜூனியர் என்.டிஆர் எளிமையான அறையில் தங்கியதை படக்குழுவினரும் பெருமையுடன் கூறுகின்றனராம்.இதனை இயக்குனர் சுகுமார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.