'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு வளர்ந்து வரும் நடிகர், அதிலும் குறிப்பாக காமெடி நடிகர் நிச்சயமாக மற்றவர்களின் பொறாமை பார்வைக்கு இலக்காகாமல் தப்பித்து வளர்வது என்பது கடினம் தான். அப்படி ஒரு சூழ்நிலை இப்போது காமெடி நடிகரான அஜு வர்கீஸுக்கும் ஏற்பட்டுள்ளது. இன்று முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களிலும் நம்ம ஊர் சந்தானம் போல தவிர்க்க முடியாத நண்பர் கேரக்டரில் வந்து காமெடியில் கலக்குபவர் நகைச்சுவை நடிகர் அஜு வர்கீஸ். தன்னுடன் 'பெருச்சாழி' படத்தில் நடித்த இவரின் திறமையையும், காமெடி சென்சையும் நன்கு கவனித்த மோகன்லால், அடுத்து தான் நடித்த 'லோஹம்' படத்திலும் அழைத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தார்.
தற்போது திலீப்புடன் முதன்முறையாக '2 கண்ட்ரீஸ்' என்கிற படத்தில் படம் முழுவதும் வரும் கேரக்டரில் நடித்து வருகிறார் அஜு வர்கீஸ். இந்த நிலையில் தான், அவர் படப்பிடிப்புக்கு தாமதமாக வந்தார். திலீப்பையே நீண்ட நேரம் காக்க வைத்தார். அதுமட்டுமல்ல, அவரது நண்பர் நிவின்பாலியின் சம்பளத்துக்கு இணையாக தனது சம்பளத்தையும் உயர்த்திவிட்டார் என்று சோஷியல் மீடியாவில் செய்திகள் கலந்துகட்டி வெளியாகி வருகின்றன. ஆரம்பத்தில் இதை சாதாரணமாக எடுத்துக்கொண்ட அஜு வர்கீஸ், இப்படியே விட்டால் இது தன் இமேஜை டேமேஜ் பண்ணிவிடும் என்பதால் கடந்தவாரம் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தன்னிலை விளக்கம் கொடுத்தார்.
“எனது முதல் படத்தை தயாரித்தவர் நடிகர் திலீப்.. சொல்லப்போனால் எனக்கு திரையுலக வாசலை திறந்துவிட்டவர் அவர்தான். அவரது தீவிர ரசிகனான நான் அவருடன் இணைந்து நடிப்பது எனக்கு கிடைத்த பாக்கியம் அப்படி இருக்கையில் படப்பிடிப்பில் அவரை காக்கவைத்தேன் என்கிற செய்தி என்னை வருத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. நான் ஒருபோதும் அப்படி செய்பவனல்ல... திலீப்பும் இந்தப்படத்தின் இயக்குனர் ஷபியும் என்மீது மிகுந்த அன்பு வைத்திருக்கிறார்கள்.. மற்றபடி நான் நிவின்பாலிக்கு இணையாக சம்பளம் கேட்கிறேன் என்பதெல்லாம் சுத்த காமெடி.. வேண்டுமானால் அப்படி யாராவது சம்பளம் தனது எனது கால்ஷீட் கேட்டால் அவர்கள் படத்தில் நடிக்க நான் ரெடி” என்று கூறியுள்ளார் அஜு வர்கீஸ்.