ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'ரேணிகுண்டா', 'எத்தன்' படங்களில் பார்த்தபோது இத்தனூண்டு பெண்ணாக இருக்கிறதே இதெல்லாம் ஹீரோயினாக நடிக்க வந்துவிட்டதே என அழகு சிறுமி சனுஷாவை பார்த்து ஆச்சர்யப்பட்டவர்கள் தான் அதிகம்.. காரணம் ரேணிகுண்டாவில் நடிக்கும்போது சனுஷாவுக்கு வயது 15 தான். ஆனால் இப்போது முதன்முதலாக கன்னடத்தில் அடியெடுத்து வைத்ததுடன், அதிலும் முதல் படத்திலேயே கன்னட சினிமாவின் மாஸ் மகாராஜ் சிவரஜ்குமாருடன் ஜோடியாக நடித்துவரும் சனுஷா, நான் இப்போ மெச்சூர்டான பெண்ணாக்கும் என சொல்லாமல் சொல்லியிருக்கிறார்...
இதுவரை முழுமூச்சாக மலையாளம், அவ்வப்போது தமிழ், எப்போதாவது தெலுங்கு என மூன்று மொழிகளில் சுற்றிவந்த சனுஷாவுக்கு கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ஜோடியாக வாய்ப்பு கிடைத்ததே சுவாரஸ்யமான விஷயம் தான். சில வருடங்களுக்கு முன்பு மலேசியாவில் நடைபெற்ற ஸ்டார்நைட் நிகழ்ச்சி ஒன்றில் சிவராஜ்குமார் அசத்தலாக டான்ஸ் ஆடியதை பார்த்து உடனே ஓடிச்சென்று சென்று தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.. சிவாவிடம் அல்ல.. அவரது மனைவியிடம்.. அவருக்கும் இவரை 'ரேணிகுண்டா' நாயகி ஓரளவு தெரிந்திருந்தது.
அதன்பின் சிவராஜ்குமாரின் 'கபீரா' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இதுவரை அவருடன் நடிக்காத நடிகைகளாக தேடியபோது யாரும் செட்டாகாமல் மண்டையைப்போட்டு உடைத்திருக்கிறார்கள். அப்போதுதான் சிவராஜ்குமாரின் மனைவிக்கு சனுஷாவின் ஞாபகம் வந்தது. உடனே அடுத்துவந்த தினங்களில் சிவரஜ்குமாருக்கு ஜோடியாக ஒப்பந்தமானமது, இப்போது அவருடன் 'கபீரா'வில் நடித்துவருவதும் கண்மூடி கண் திறப்பதற்குள் நடந்துவிட்டன. சனுஷா இப்போ ஹேப்பி அண்ணாச்சி..!