வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
மலையாள திரையுலகை பொருத்தவரை நல்ல கதையம்சம் உள்ள படங்களை கொடுத்தாலும் கமர்சியல் வெற்றி படங்களை கொடுத்தாலும் அவர்களது வியாபார எல்லையும் வசூல் இலக்கும் இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக விரிவடைந்து வருகின்றன. குறிப்பாக மலையாள திரையுலகில் ஒரு ஹிட் படம் 50 கோடி வசூலை தொடுவது என்பதே மிகப்பெரிய சாதனைதான்.. அந்தவகையில் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஜனகனமன என்கிற படம் வெளியாகி கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன நிலையில் தற்போது 50 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ளது.
ஒரு பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து எரித்து கொல்லப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக என்கவுன்டர் செய்து கொல்லப்படுகின்றனர். ஆனால் வழக்கறிஞரான பிரித்விராஜ் இது அரசியல் காரணங்களுக்காக போலியாக நடத்தப்பட்ட என்கவுன்டர் என வாதிட்டு உண்மை என்ன என்பதை வெளிக்கொண்டு வருவார். ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த படத்தை இயக்குனர் டிஜோ ஜோஸ் ஆண்டனி என்பவர் இயக்கியிருந்தார்.