தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழில் கடந்த நான்கு வருடங்களாகத்தான் 'பிக் பாஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், ஹிந்தியில் 14 சீசன்கள் முடிந்துவிட்டது. இந்த வருடத்திற்கான 15வது சீசன் அக்டோபர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது.
கடந்த 11 சீசன்களாக சல்மான்கான் இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்து வருகிறது. கடைசியாக ஒளிபரப்பான 14வது சீசனில் சல்மான்கான் ஒரு வாரத்திற்கு 20 கோடி வரை சம்பளம் வாங்கினாராம். ஆனால், வர உள்ள 15வது சீசனில் ஒரு வாரத்திற்கு 25 கோடி வரை தனது சம்பளத்தை உயர்த்திவிட்டாராம்.
நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு இருப்பதால் சல்மான்கான் கேட்ட தொகையை தயாரிப்பு நிறுவனம் வழங்க சம்மதித்துவிட்டதாம். மொத்தம் 14 வாரங்கள் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் மட்டும் சல்மான் மொத்தமாக 350 கோடி வரை சம்பாதித்து விடுவார்.
ஒரு படத்தில் 100 நாட்கள் நடித்தால் கிடைக்கும் சம்பளத்தை விட 14 நாட்களில் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் மூன்று மடங்கு சம்பளம் அதிகம் வரும். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு அதிகமாக சம்பாதிக்கும் பிரபலங்களின் டாப் 5 பட்டியலில் சல்மான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.