ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? |
தமிழில் வீணை எஸ்.பாலச்சந்தர் திகில் படங்கள் எடுத்து பிரபலமானவர். அவரைப்போன்றே ஹிந்தியில் திகில் படங்கள் எடுத்து திகில் பட மன்னன் என்று புகழப்பட்டவர் துளசி ராம்சே. 80களில் இவர் எடுத்த திகில் படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்தது. ஹோட்டல் புரானா, மந்திர், தக்கானா, வீரானா, பந்த் தர்வாஸா, போன்றவை முக்கியமான படங்கள்.
முதுமை காரணமாக சினிமா விட்டு விலக்கிய துளசி ராம்சே, மும்பை அந்தேரி பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவருக்கு வயது 77. துளசி ராம்சே உடலுக்கு இந்தி திரையுலகினர் அஞ்சலி செலுத்தினார்கள்.