பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பல ஆண்டுகளாக பரம விரோதிகளாக இருந்த தீபிகாவும், கத்ரீனாவும், இப்போது நெருக்கமான தோழியராகி விட்டனர். பாலிவுட்டின் பிரபல நடிகர், ரன்பீர் கபூரை, சில ஆண்டுகளுக்கு முன், இருவருமே போட்டி போட்டு காதலித்தனர். இதனால் ஏற்பட்ட தகராறில், இருவரும் பேசுவது கூட இல்லை. நேரில் பார்த்தால் கூட, முகத்தை திருப்பிச் சென்று விடுவர்.சமீபத்தில் நடந்த தீபிகா - ரன்வீர் சிங் திருமணத்துக்கு பின், எல்லாமே தலைகீழாகி விட்டது. திருமண வரவேற்புக்கு கத்ரீனா வரமாட்டார் என்று தான், அனைவரும் நினைத்தனர். ஆனால், தவறாமல் ஆஜரானதுடன், கடைசிவரை அங்கேயே இருந்து, மணமக்களை வாழ்த்திவிட்டுத் தான் சென்றார். திருமணம் நிச்சயமானதுமே, ரன்வீர் சிங் எனக்கு அழைப்பிதழ்வைத்தார். வரவேற்பில் பங்கேற்றது, இனிமையான அனுபவமாக இருந்தது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என, களை கட்டியது. ஒவ்வொரு நிமிடமும், மகிழ்ச்சியாக இருந்தது.இப்போது, நானும், தீபிகாவும் நெருங்கிய தோழியராகி விட்டோம் என,மகிழ்ச்சியுடன் கூறுகிறார், கத்ரீனா.