ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் |
ரஜினிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடித்த '2.0' படம் ஹிந்தியில் டப்பிங் ஆகி வட இந்தியாவில் வெளியானது. தமிழ்நாட்டைவிட ஹிந்தி பேசும் மாநிலங்களில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது. அதனால், ஒரு வாரத்திற்கு முன்னதாக ஐந்தே நாட்களில் விரைவாக 100 கோடி வசூலைக் கடந்த 2.0 படம் தற்போது 150 கோடியைக் கடந்துள்ளது.
அமிதாப்பச்சன், ஆமீர்கான் ஆகியோர் நடித்த நேரடி ஹிந்திப் படமான 'தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான்' வசூலையும் '2.0' வசூல் தொகை கடந்துவிட்டது. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் 2.0 படத்தின் வசூல் வார நாட்களை விட அதிகமாகியுள்ளது. இன்னும் ஒரு வாரம் ஓடினால் ஹிந்தியில் மட்டுமே இந்தப் படம் 200 கோடி ரூபாய் வசூலைக் கடக்கும் என்கிறார்கள்.
அக்ஷய் குமார் படத்தில் இருந்ததால் இது சாத்தியமானது என்ற குரலும் எழாமல் இல்லை. இருப்பினும் ஒரு தமிழ்ப் படம் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டு முதன்முதலாக 150 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியது சாதாரண விஷயமல்ல. ஆனாலும், 'பாகுபலி 2' படத்தின் வசூலை '2.0' படம் முறியடிக்க முடியாமல் போனது ரஜினி ரசிகர்களுக்கு வருத்தமான ஒரு விஷயம்தான்.