தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டில் காதல் ஜோடிகளாக வலம் வந்த ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே ஜோடி, சில நாட்களுக்கு முன்னர் தம்பதிகளாக மாறினர். இவர்களது, திருமணம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் மிக பிரம்மாண்டமாய் நடந்தது. கொங்கனி மற்றும் பஞ்சாபி முறைப்படி திருமணம் நடந்தது.
இந்த திருமணத்தில் இருவீட்டாரது நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணம் முடிந்த இருநாட்களுக்கு பிறகே மணமக்களின் போட்டோ வெளியாகின. அந்தளவுக்கு யாரும் போட்டா எடுக்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்போடு திருமணம் நடந்தது.
இந்நிலையில் தீபிகா, ரன்வீர் திருமணம் முடிந்து இந்தியா திரும்பி உள்ளனர். விமான நிலையத்தில் இவர்களுக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. அடுத்தப்படியாக திருமண வரவேற்புக்கான ஏற்பாடுகள் துவங்கி உள்ளன. பெங்களூருவில் ஒரு வரவேற்பும், மும்பையில் ஒரு வரவேற்பும் நடைபெற இருக்கின்றன.