ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்திய அழகி பட்டத்தை பெறுவதற்காக, நடிகை தனுஸ்ரீ தத்தா, முறைகேடான செயலில் ஈடுபட்டதாக, நடிகை ராக்கி சாவந்த், அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர், நானா படேகர் மீது, முன்னாள் இந்திய அழகியும், பாலிவுட் நடிகையுமான, தனுஸ்ரீ தத்தா, 34, சமீபத்தில், பாலியல் புகார் அளித்து, பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த பாலியல் குற்றச்சாட்டின் போது, நானா படேகருக்கு ஆதரவாக, மற்றொரு பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த், 39, செயல்பட்டார்.
இந்நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தாவுக்கும், பாலிவுட் நடிகை ராக்கி சாவந்துக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. தனுஸ்ரீ பற்றி, ராக்கி சாவந்த் கூறியதாவது: தனுஸ்ரீ தத்தா, 10 ஆண்டுகளுக்கு முன், என்னுடன் ஓரினச்சேர்க்கை உறவு வைத்திருந்தார்; அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. தனுஸ்ரீ, ஆண்கள் மற்றும் பெண்களுடன் உறவு கொள்ளும் குணம் உள்ளவர். பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.