தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல இசை அமைப்பாளர் அனு மாலிக். மீ டூ இயக்கத்தின் வழியாக இவர், மீது பாடகிகள் ஸ்வேதா பண்டிட், சோனா மொகாபத்ரா ஆகியோர் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தார்கள். பல ஆண்டுகளுக்கு முன்பு அனு மாலிக் தங்களுக்கு கொடுத்த பாலியல் தொல்லைகளை விவரித்திருந்தார்கள். இதனை அனு மாலிக் மறுத்துள்ளார்.
இதற்கிடையில் அனுமாலிக் சோனி டி.வியில் இந்தியன் ஜடோல் என்ற பெயரில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார். பாலியல் புகாரையொட்டி நிகழ்ச்சியிலிருந்து விலகி கொள்ளுமாறு அனு மாலிக்கை சோனி நிறுவனம் கேட்டுக் கொண்டது. அதன்படி அவர் விலகிக் கொண்டார்.
"அனு மாலிக் இனி இந்தியன் ஜடோல் நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார். நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கும்" என்று சோனி நிறுவனம் அறிவித்துள்ளது. "தொலைக்காட்சி நிகழ்ச்சியிலிருந்து ஓய்வுக்காக விலகியுள்ளேன்" என்று அனு மாலிக் தெரிவித்துள்ளார்.