டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், 850 விவசாயிகளின் வங்கி கடன்களை திருப்பி செலுத்தியுள்ளார்.
பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் 76, கடந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் 350 விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை திருப்பி் செலுத்தினார். இந்நிலையில் நிலையில், இந்த ஆண்டு உபி. மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் 850 விவசாயிகளின் வங்கிக்கடனை திருப்பிச் செலுத்தியுள்ளார்.
இது குறித்து அமிதாப் பச்சன் முகநூலில் கூறியிருப்பதாவது, கடந்த ஆண்டு 350 விவசாயிகள் வங்கி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் இருந்தார்கள். அவர்களின் கடனை திருப்பிச் செலுத்தி தற்கொலை செய்யும் முடிவிலிருந்து தடுத்தேன். இந்த ஆண்டு உ.பி. மாநிலத்தில் 850 விவசாயிகளை தேர்வு செய்து அவர்களின் ரூ.5.5 கோடி விவசாயக் கடனை வங்கியில் செலுத்தி இருக்கிறேன் விவசாயிகளுக்காக நாம் ஏதாவது செய்துவருவது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.
அமிதாப்பின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.