டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன் பீக்கில் இருந்த இவர், சமீபத்திய ஒரு பேட்டியில் நடிகர் நானா படேகர் மீது பாலியல் ரீதியான குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
2009ல் நானா படேகர் நடித்த 'ஹார்ன் ஓகே ப்ளீஸ்' என்கிற படம் வெளியானது.. இந்தப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுவதற்காக தனுஸ்ரீ தத்தாவை ஒப்பந்தம் செய்திருந்தார்களாம். ஆனால் நடனக் காட்சியின்போது மிகவும் ஆபாசமான மூவ்மென்ட் ஒன்றை செய்ய வற்புறுத்திய நானா படேகர், தனுஸ்ரீ தத்தாவிடம் தவறாக நடந்து கொண்டாராம். ஆனால் இதை எதிர்த்து குரல் கொடுத்த தனுஸ்ரீயை படத்திலிருந்து தூக்கிவிட்டு அவருக்கு பதிலாக கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்தை வைத்து அந்த பாடல் காட்சியை படமாக்கினார்களாம்.
அந்த சமயத்தில் தனுஸ்ரீ தத்தா, தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுக்கு பதிலளித்த நானா படேகர், தனுஸ்ரீ தனக்கு மகள் மாதிரி என்றும், இந்த 35 ஆண்டுகளில் தன் மேல் யாரும் இப்படி குற்றம் சாட்டியதில்லை என்றும் கூறி பிரச்சனையை அமுக்கி விட்டாராம்..
இந்த விஷயங்களை தற்போது மீண்டும் ஒரு பேட்டியில் நினைவுபடுத்தியுள்ள தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் போன்றவர்கள் கஷ்டப்படும் சில விவசாயிகளுக்கு பணம் கொடுத்து நல்லவர்களாக கட்டிக் கொள்கின்றனர். இப்படிப்பட்ட நபர்களை ரஜினிகாந்த், அக்சய் குமார் போன்ற மிகப்பெரிய நடிகர்கள் தங்கள் படங்களில் வாய்ப்பு தராமல் விலக்கி வைக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.