ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் பாலிவுட் கவர்ச்சி நடிகையான சன்னி லியோன். அதனால் இவர் படப்பிடிப்பிற்காக செல்லும் இடங்களுக்கு தானே சொந்தமாக பாதுகாவலர்களை அழைத்து செல்கிறார். அப்படி சமீபத்தில் ஆமதாபாத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்துகொண்டு மும்பை திரும்புவதற்காக ஆமதாபாத் விமான நிலையம் வந்த சன்னி லியோனுக்கும், விமான நிலைய அதிகாரிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதாவது விமான நிலையத்தில் க்யூவில் நின்று ரசிகர்களின் தொல்லைக்கு ஆளாகாமல் இருப்பதற்காக தன்னையும் தனது பாதுகாவலர்களையும் உள்ளே அனுமதிக்குமாறு சன்னி லியோன் கேட்டுள்ளார். ஆனால், அவரையும் அவரது உடைமைகளையும் மட்டுமே அனுமதித்த அதிகாரிகள், அவரது பாதுகாவலர்களை அப்படி அனுமதிக்க மறுத்து வரிசையில் வரச்சொல்லி விட்டனர்.
இதனால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் சன்னி லியோன். இதையடுத்து அவருடன் ஒரே ஒரு பாதுகாவலரை மட்டும் செல்ல அனுமதித்தனர். இதுகுறித்து டுவிட்டரில் பகிர்ந்துள்ள சன்னி லியோன், "விமான நிலைய அதிகாரிங்கள் எனக்கு உதவுவார்கள் என நினைத்தது என் தவறு தான்" என நொந்துபோய் கூறியுள்ளார்.