பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பிரேமம் படம் வந்தாலும் வந்தது.. சினிமா பிரபலங்கள் பலருக்கும் தாங்கள் பள்ளியில், கல்லூரியில் படித்த காலங்களில் தங்களது டீச்சர் மீது அந்த வயதில் தோன்றிய இனம் புரியாத ஈர்ப்பை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்கள். அந்தவிதமாக பாலிவுட் முன்னணி நடிகர் சல்மான்கானும் தனது பள்ளி அனுபவத்தில் அப்படி ஒரு பரவச அனுபவம் இருந்ததாக கூறியுள்ளார்.
தான் நடத்திவரும் தஸ் கா டம் டமார் நிகழ்ச்சியின்போது மனம் திறந்துள்ளார். பள்ளியில் படிக்கும்போது தனது மனம் கவர்ந்த டீச்சர் ஒருவரை தினசரி தனது சைக்கிளில் அழைத்து வருவாராம் சல்மான்கான். இதற்காக தனது சைக்கிளின் பின்னால் உள்ள கேரியரை கழற்றி வைத்துவிட்டு, டீச்சரை முன்பக்கம் அமரவைத்து சைக்கிளை ஓட்டிக்கொண்டே பேசிக்கொண்டு வருவேன் என கூறியுள்ளார்.
"பலருக்கும் படிக்கும் பருவத்தில் தங்கள் ஆசிரியை மீதான ஈர்ப்பு இருந்திருக்கவே செய்யும்.. பெரும்பாலானோர் அதை வெளியில் சொல்வதில்லை. ஆனால் நான் ஓப்பனாக சொல்லிவிட்டேன்" என கூறியுள்ளார் சல்மான்கான்.