ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள இயக்குனர்களுக்கு பாலிவுட்டில் நல்ல வரவேற்பு இருக்கிறது. பிரியதர்ஷன், சித்திக் ஆகியோரை தொடர்ந்து இயக்குனர் ஜீத்து ஜோசப் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்து தனது முதல் படமாக பாடி என்கிற படத்தை இயக்கி முடித்து விட்டார். இவரை தொடர்ந்து இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸும் அடுத்ததாக பாலிவுட்டில் அடியெடுத்து வைக்கிறார்.
தற்போது நிவின்பாலி - மோகன்லாலை வைத்து மலையாளத்தில் காயம்குளம் கொச்சுண்ணி என்கிற படத்தை இயக்கியுள்ள ரோஷன் ஆண்ட்ரூஸ், அடுத்ததாக இந்தியில் தான் படம் இயக்கவுள்ளாராம். அது இவருடைய மலையாள படம் ஒன்றின் ரீமேக்காக இருக்கும் என் சொல்லப்படுகிறது. ஆனால் அது இந்தப்படம் என்பதை சஸ்பென்சாகவே வைத்துள்ளாராம் ரோஷன் ஆண்ட்ரூஸ்..