ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள திரையுலகில் தற்போது மோகன்லால், மம்முட்டி, திலீப் என சீனியர் நடிகர்களும் துல்கர் சல்மான், பஹத் பாசில், நிவின்பாலி என ஜூனியர் முன்னணி நடிகர்களும் இருந்தாலும், இந்த இரண்டு லிஸ்டிலும் சேராதவர், அல்லது இரண்டு லிஸ்ட்டுக்கும் பொதுவானவர் என்றால் அது நடிகர் பிருத்விராஜ் மட்டும் தான். நேற்று வெளியாகியுள்ள கூடே திரைப்படம் அவர் நடிப்பில் வெளியாகியுள்ள 100வது படமாகும். இந்த கணக்கில் மலையாளம் மட்டுமல்லாமல், தமிழி, தெலுங்கு, இந்தி ஆகிய படங்களும் அடங்கும்.
மறைந்த பிரபல மலையாள நடிகர் சுகுமாரனின் இளைய மகனான பிருத்விராஜ் 2002ல் வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்தாலும், தனது திறமையாலும், வித்தியாசமான கதை தேர்வினாலும் படிப்படியாக முன்னணி நடிகராக மாறியவர். கமர்ஷியல் அம்சங்களை விட கதையம்சத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதால் ஒரு படத்தின் வெற்றி தோல்வி பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை.
கடந்த இரண்டு வருடங்களாக பெரிய வெற்றி என எதையும் பாக்காத பிருத்விராஜுக்கு அஞ்சலி மேனன் டைரக்சனில் தற்போது அவரது 100வது படமாக வெளியாகியுள்ள கூடே படத்திற்கு கிடைத்துவரும் வரவேற்பு உற்சாகத்தை கொடுத்துள்ளதாம்.
தற்போது மோகன்லால் நடிக்கும் லூசிபர் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ள பிருத்விராஜ் தனது 100வது படத்தை முடித்தபின்பே டைரக்ஷன் துறையில் கால்பதிக்க இருக்கிறார் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டிய சிறப்பம்சம்..