டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா இப்போது ஹாலிவுட்டிலும் பிசி. ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் அவர் அங்குள்ள முன்னணி சேனல் ஒன்றில் குவான்டிகோ என்ற தொடரிலும் நடித்து வருகிறார். இதில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார்.
இந்த தொடரின் சமீபத்திய எபிசோட்களில் ஒரு இந்தியரை தீவிரவாதியாக சித்தரித்து கதையை நகர்த்தி வருகிறார்கள். இதற்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்தியாவிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
ஒரு இந்தியரான பிரியங்கா சோப்ரா இதில் எப்படி நடிக்கலாம் என்று அவருக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. அமெரிக்காவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பிரியங்காவின் போஸ்டர்களை கிழித்தும், குவாண்டிகோ விளம்பரத்தை அகற்றியும் போராட்டம் நடந்தது. இந்த நிலையில் இதற்கு பிரியங்கா சோப்ரா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பதாவது: குவான்டிகோ தொடரால் சிலருடைய மனது புண்பட்டுள்ளதை அறிந்து வருத்தமுற்றேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். யாரையும் புண்படுத்த வேண்டும் என்பது எனது எண்ணம் இல்லை. நான் இந்தியன் என்பதை பெருமையாக நினைக்கிறேன். அதில் எப்போதும் மாற்றம் இல்லை. என்று பதிவிட்டுள்ளார். இதேப்போல குவான்டிகா தொடரை ஒளிபரப்பி வரும் சேனலும் வருத்தம் தெரிவித்துள்ளது.