தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் |
பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர். பாகியா என்ற படத்தில் அறிமுகமாகி 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குடும்பத்தால் அநாதையாக விடப்பட்ட கீதா கபூர் மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிகிச்சைக்கு பணம் செலுத்தக்கூட யாரும் வரவில்லை. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த ஒரு சிலரின் உதவியால் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
சிகிச்சை முடிந்ததும் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடடியாக அவர் கோரேகாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்து, 100 படங்களுக்கு மேல் நடித்த கீதா கபூர் யாருமற்ற அநாதையாக மரணித்தார்.