ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இந்தியில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டி ருப்பவர் ஆலியாபட். பிரபல பாலிவுட் பட இயக்குனர் மகேஷ்பட்டின் மகளான இவரும் தற்போது நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பிரச்சினை குறித்து ஒரு ஆவேச கருத்தினை வெளியிட்டுள்ளார்.
அதுகுறித்து ஆலியாபட் கூறும்போது, சினிமாவில் படவாய்ப்புகளுக்காக நடிகைகள் போராடுகிறார்கள். அதை பயன்படுத்தி சில பிரபலங்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இதற்கு இப்போதே ஒரு முடிவுகட்ட வேண்டும்.
அதாவது, யாராவது சினிமா பிரபலங்கள் நடிகைகளை படுக்கைக்கு அழைத்தால் அதுகுறித்து உடனே தங்களது பெற்றோரிடம் சொல்ல வேண்டும். பின்னர் போலீசில் புகார் அளிக்க வேண்டும். இப்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நடிகைகளும் தைரியமாக அதை எதிர்கொள்ளும் போதுதான் சினிமா உலகில் தொடர்கதையாகி வரும் பாலியல் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று கூறியுள்ளார் ஆலியாபட்.
வாரிசு நடிகையான ஆலியாபட்டின் இந்த கருத்து பாலிவுட்டில் பரபரப்பை உருவாக்கியிருக்கிறது.