டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ராதிகா ஆப்தே உள்ளிட்ட சில நடிகைகள் திரையுலகில் நடிகைகளுக்கு இருந்து வரும் பாலியல் தொல்லை குறித்து தைரியமாக பேசி வருகின்றனர். அவர்களைத் தொடர்ந்து தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டியும் பல பிரபலங்களின் பெயர்களை பட்டியலிட்டார்.
இந்த நிலையில், தக் என்ற இந்தி படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற உஷா ஜாதவ் என்ற ஹிந்தி நடிகையும் திரையுலகில் நடிகைகளுக்கு நிலவி வரும் பாலியல் பிரச்சினை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், திரையுலகில் தயாரிப்பாளர், டைரக்டர்களிடம் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே நடிகைகளுக்கு படவாய்ப்பு கிடைக்கிறது. அப்படி இல்லாதவர்கள் சினிமாவில் நடிப்பதற்கு தகுதியற்றவர்கள் என்று ஓரங்கட்டப்படுகிறார்கள்.
தங்களது சினிமா கேரியர் பாதிக்கும் என்பதால் சில நடிகைகள் இதற்கு உடன்படுகிறார்கள். இந்த பிரச்சினை புதுவரவு நடிகைகள் மட்டுமின்றி முன்னணியில் இருக்கும் நடிகைகளுக்கே உள்ளது என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் உஷா ஜாதவ்.
இந்த உஷா ஜாதவ், ராம்கோபால் வர்மா இயக்கிய சந்தன கடத்தல் வீரப்பன் கதையில் உருவான வீரப்பன் படத்தில், வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.