இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியர் அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய். கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது. இருவரும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
சமீபகாலமாக ஐஸ்வர்யாவுக்கும், அபிஷேக்கிற்கும் இடையே சரியான புரிதல் இல்லை என்றும், ஒரே வீட்டில் வாழ்ந்தாலும் இருவரும் தனித்தனியாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அபிஷேக்கின் செல்போனை எடுத்து, அவர் யார் உடன் எல்லாம் பேசுகிறார் என்பதை ஐஸ்வர்யா ராய் கண்காணித்ததாவும், இதனால் ஐஸ்வர்யா மீது அபிஷேக் கோபப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இது ஹிந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இதை ஐஸ்வர்யா ராய் மறுத்துள்ளார்.
இதனிடையே அபிஷேக் - ஐஸ்வர்யா தம்பதியருக்கு இன்று(ஏப்., 20) திருமண நாள். 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளனர். இதை வெளிப்படுத்தும் விதமாக அபிஷேக் தன் இன்ஸ்டிராகிராமில் ஒரு போட்டோவை வெளியிட்டு ஐஸ்வர்யா ராய் உடனான தன் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.