ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கில், அவர் குற்றவாளி என அறிவித்து 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட் இன்று (ஏப்.,05) தீர்ப்பு வழங்கி உள்ளது.
1998 ம் ஆண்டு அக்டோபர் 1 ம் தேதி வனப்பகுதியில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது அவ்வழியாக சென்ற மானை வேட்டையாடி தனது ஜிப்சி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சல்மான் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சல்மான் கான், அவருடன் சென்ற சைப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜோத்பூர் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சல்மான் கான் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்கு நாளைக்கு வர இருக்கிறது.
சக நடிகர்களான சைப் அலிகான், தபு, சோனாலி, நீலம் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.