டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களின் அமோகமான வரவேற்பு, வெற்றிக்குப் பிறகு சரித்திரப் படங்களை எடுத்தால் மக்கள் வரவேற்பு கொடுப்பார்கள் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சமீபத்தில் வெளிவந்த 'பத்மாவத்' படமும் நல்ல வசூலைப் பெற்றது. சர்ச்சைகள் எழாமல் இருந்தால் அந்தப் படம் இன்னும் அதிகமான வசூலைப் பெற்றிருக்கலாம் என்கிறார்கள்.
இதனிடையே, இந்தியாவின் பெரும் தொழிலதிபரான முகேஷ் அம்பானி, அமீர்கானுடன் இணைந்து 'மகாபாரதா' படத்தைத் தயாரிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக 1000 கோடி ரூபாய் முதலீடு செய்ய அவர் தயாராக இருக்கிறாராம். நீண்ட நாட்களாகவே மகாபாரதக் கதையில் நடிக்க வேண்டும் என்பது தனது ஆவல் என அமீர்கான் சொல்லி வருகிறார்.
அமீர்கான் நடித்த 'தங்கல்' படம் சீன வசூலில் சாதனை புரிந்ததால் அவருடைய பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் அதிகரித்துள்ளது. 'தங்கல்' படம் இதுவரை 1900 கோடி வசூலித்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதனால், அமீர்கான் 'மகாபாரதா' படத்தை 1000 கோடியில் தயாரித்தால் 3000 கோடி வரை வசூல் அள்ளலாம் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.