டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் பரினீதி சோப்ரா, நடிகர் அர்ஜூன் கபூருக்கு ஜோடியாக சந்தீப் அவுர் பிங்கி ஃபரார் என்ற நடித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் சமீபத்தின் தான் முடிவடைந்தது. இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது பரினீதி சோப்ராவிடம், அர்ஜூனுடன் நடித்த அனுபவம் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், அவருடன் முதலில் இஷாக்ஜாதே என்ற படத்தில் தான் நடித்தேன். அந்த வகையில் அவர் தான் என் முதல் ஹீரோ. அங்களுக்கும் அப்படி ஒரு அற்புதமான ஒற்றுமை உள்ளது. எங்களுக்கு யார் சிறப்பானவர் என சொல்லவே முடியாது. எனக்கு தெரியும் நாங்கள் ஒருவர் மீது ஒருவர் நல்ல அன்பு வைத்துள்ளோம். நாங்கள் எங்களின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் போன் செய்த பேசிக் கொள்வோம்.
ஆனால் பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்ற வார்த்தையை நாங்கள் சொல்லிக் கொண்டதே இல்லை. எங்களின் வாழ்க்கையை பற்றி மட்டும் தான் பேசுவோம். அது தான் அன்பும் அக்கறையும் கொண்ட ஒருவரின் அடையாளம். யாராவத அர்ஜூனுக்கு எதிராக ஏதாவது கூறினால், நான் எழுந்து அர்ஜூனுக்காக பேசுவேன் நான் சாகும்வரை. எனது வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலாவர்களில் அவரும் ஒருவர் என்றார்.