'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
நடிகர் அர்ஜூன் கபூர், "சந்தீப் அவுர் பிங்கி பரார்" என்ற படத்தில் நடித்து வந்தார். இவருக்கு ஜோடியாக பரிணிதி சோப்ரா நடிக்கிறார். திபாகர் பானர்ஜி இயக்குகிறார். படத்தில் அர்ஜூன், ஹரியானா போலீஸாகவும், பரிணிதி, கார்பரேட் கம்பெனியில் வேலை பார்ப்பவராகவும் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவுப் பெற்றது.
இதை அர்ஜூன் கபூர், தன் டுவிட்டரில் தெரிவித்திருக்கிறார். அதில், பரிணிதி சோப்ராவுடன் நான் நடித்து வந்த எனது 10வது படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இயக்குநர் திபாகர் பானர்ஜியுடன் பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது என்று கூறியுள்ளார்.
"சந்தீப் அவுர் பிங்கி பரார்" படத்தை யாஸ் ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி படம் ரிலீஸாகிறது.