மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
டாய்லெட் படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகை பூமி பத்னேகர். இவர், அடுத்தப்படியாக அபிஷேக் சவுபே இயக்கத்தில் சன் சிறையா என்ற படத்தில் நடிக்கிறார். இவருடன் சுஷாந்த் சிங் ராஜ்புட் முக்கிய ரோலில் நடிக்கிறார். சம்பல் பள்ளத்தாக்கில் உள்ள கொள்ளையர்களை மையமாக வைத்து இப்படம் உருவாக உள்ளது. இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளார் பூமி.
இதுகுறித்து அவர் கூறுகையில், படத்திற்கான ஆயத்த பணிகள் சிறப்பாக செல்கிறது. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அருமையான கதை, படத்தில் அருமையான நடிகர்கள் நடிக்கிறார்கள். இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என நம்புகிறேன். அதேசமயம் கொஞ்சம் பயமாகவும், பதட்டமாகவும் உள்ளது. இப்படத்தில் நடிக்க மிகவும் ஆர்வமாய் உள்ளேன் என்கிறார் பூமி.