விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
சில மாதங்களுக்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த உஸ்மா அகமது என்ற பெண், மலேசியாவில் பணியாற்றிய போது பாகிஸ்தானியர் ஒருவரால் ஈர்க்கப்பட்டு, பாகிஸ்தான் அழைத்து செல்லப்பட்டு, அங்கு துப்பாக்கி முனையில் கட்டாய திருமணத்திற்கும், சித்ரவதைக்கும் உள்ளாக்கப்பட்டார். பின்னர் அங்குள்ள இந்திய தூதரகம் மூலமாக பத்திரமாக இந்தியா திரும்பியவர், பாகிஸ்தான் ஒரு மரணக்கிணறு, அந்நாட்டிற்கு செல்வது சுலபம், ஆனால் வெளியில் வர முடியாது. இந்தியா போன்ற ஒரு சுதந்திரமான பாதுகாப்பான நாடு இல்லை என்று கூறினார். இவரின் வாழ்க்கையை பாலிவுட்டில் சினிமாவாக எடுக்க உள்ளனர்.
சிவம் நாயர் இப்படத்தை இயக்க உள்ளார். இதில் உஸ்மா அகமதாக, இலியானா நடிக்க உள்ளார். இதுகுறித்து சிவர் நாயர் கூறுகையில், என்னுடைய படத்தில் இலியானாவை நடிக்க வைக்க விரும்புகிறேன். இதுதொடர்பாக அவரிடம் பேசினேன், அவருக்கும் பிடித்திருக்கிறது. உஸ்மாவையும் சந்தித்து பேசியுள்ளோம். தற்போது திரைக்கதை அமைக்கும் பணி நடக்கிறது. உஸ்மா ரோலுக்கு இலியானா தான் மிக பொருத்தமாக இருப்பார் என்றார்.