தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சாகித் கபூர் நடித்திருக்கும் பத்மாவதி படம் பிரச்னையால் தள்ளி போய் உள்ளது. பத்மாவதியை தொடர்ந்து சாகித், ஸ்ரீ நாராயண் சிங் இயக்கும், "பட்டி குல் மீட்டர் சாலு" என்ற படத்தில் நடிக்க உள்ளார். பொதுவாக ஒரு படத்தில் நடிக்க சம்மதம் சொல்ல அதிக நாட்கள் எடுத்து கொள்வார் சாகித். ஆனால் இந்தப்படத்தை பொறுத்தமட்டில் அவர் உடன் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார்.
இதற்கு முக்கிய காரணமே அவரது மனைவி மிரா தான். மிரா மனைவியாக மட்டுமல்லாது அவரின் விமர்சகரும் கூட, பட்டி குல் கதையை கேட்டதும் அவருக்கு மிகவும் பிடித்து போய்விட்டதாம். இதன் காரணமாக சாகித்தும் உடன் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டார். படத்தில் வக்கிலாக நடிக்க உள்ளார் சாகித். விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அடுத்தாண்டு ஆகஸ்ட் 31-ல் படம் ரிலீஸாகிறது.