தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி |
'தீபிகா தலைக்கு, 10 கோடி ரூபாய் தருவோம். தீபிகாவை உயிருடன் எரித்தால், ஒரு கோடி ரூபாய் தருவோம். தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்' என, தனக்கு எதிராக, பகிரங்கமாக, தினமும் மிரட்டல் விடுக்கப்படுவதை பார்த்து, உண்மையிலேயே மிரண்டு போயிருக்கிறார், தீபிகா.
சர்ச்சைக்குரிய பத்மாவதி படத்தில், அவர் நடித்தது தான், இந்த மிரட்டலுக்கு காரணம். ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்த, சித்துார் கோட்டை ராணி, பத்மினியாக, பத்மாவதி படத்தில் நடித்துள்ளார், தீபிகா. இதில், ராணி பத்மினியை தரக்குறைவாக சித்தரிக்கும் வகையிலான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறி, வட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. துவக்கத்தில், இதை பொருட்படுத்தாமல் இருந்த தீபிகா, இப்போது, பீதியில் உறைந்து போயுள்ளார்.
'நாங்கள் குல தெய்வமாக வழிபடும் பத்மினியை பற்றி தரக்குறைவாக விமர்சித்தால், சும்மா விட்டு விடுவோமா' என, ராஜபுத்ர சமூகத்தினர் விடும் மிரட்டல்களால், வீட்டை விட்டு வெளியேற முடியாதபடி முடங்கி கிடக்கிறார், தீபிகா.