தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
நடிகை ஐஸ்வர்யா ராய், நேற்று உதடு பிளவுப்பட்ட 100 குழந்தைகளின் மருத்துவ சிகிச்சைக்கு உதவும் வகையில் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு தனது மகள் ஆராத்யாவுடன் சென்றார். ஐஸ்வர்யா வருவதை அறிந்து அங்கு ஏராளமான புகைப்பட கலைஞர்களும், பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டனர். புகைப்பட கலைஞர்கள் ஐஸ்வர்யா மற்றும் அவரது மகளை போட்டோ எடுக்க அதிக ஆர்வம் காட்டினார். இதனால் அவர்கள் கூச்சலிட்டதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா, அவர்களை வேண்டாம், இது படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி அல்ல, குழந்தைகள் நிகழ்ச்சி, அவர்கள் பயப்படுகிறார்கள் என்று எவ்வளவோ சொல்லி பார்த்தார். ஆனால் புகைப்படக்காரர்கள் அதை கேட்கவில்லை. இதனால் ஒருக்கட்டத்தில் இவர்களின் செயலை பார்த்து கண்கலங்கி விட்டார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.