தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை விவகாரத்தில் சிக்கி சிறைவாசம் அனுபவித்த நடிகர் திலீப், ஒருவழியாக ஜாமீனில் வெளிவந்துள்ளார். புதிய படங்களில் நடிக்க அவர் ஒப்புக்கொள்கிறாரா என்கிற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களை நடித்துக் கொடுக்க இருக்கிறார் என்றே சொல்லப்படுகிறது.. இப்போது புதிய சிக்கல் என்னவென்றால், திலீப் கைது செய்யப்பட்டபோது, அவர் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'விலிருந்து நீக்கப்பட்டார்.
தற்போது ஜாமீனில் திலீப் வெளிவந்துள்ள நிலையில் மீண்டும் சங்கத்தில் சேர்வாரா, இல்லை சங்கத்தில் சேராமலேயே படங்களில் நடிப்பாரா என கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து திலீப்பின் ஆதரவாளரும், நடிகரும், நடிகர் சங்க துணைத்தலைவரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான கணேஷ்குமார் கூறும்போது,
“திலீப்பை சங்கத்தில் இருந்து நீக்கியதே தவறு.. அந்த நேரத்தில் யாரையோ திருப்திப்படுத்துவதற்காக மம்முட்டி அவசர அவசரமாக அறிவித்த முடிவு அது. தற்போது சங்கத்தில் தொடர்வதும் விலகி நிற்பதும் திலீப் எடுக்க வேண்டிய முடிவு. இதே நிலையில் நான் இருந்தால் சங்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு என் வேலையை தொடர்வேன்” என கூறியுள்ளார்.
நடிகர் சங்கத்தில் சேர்வது குறித்து திலீப் கோரிக்கை வைக்கிறாரோ அல்லது நீக்கியது செல்லாது என சட்டவிதிகளின் படி போராடப் போகிறாரோ தெரியாது, ஆனால் திலீப் கைது செய்யப்பட்டபோது தவிர்க்க முடியாத சூழ்நிலையால் அவரை விலக்கும் முடிவை எடுத்த நடிகர் சங்கம், இனி திலீப்பிற்கு எந்தவித சங்கடங்களையும் தராது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.