டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பிரபல பெங்காலி நடிகை காஞ்சனா மோத்ரா. இவர் ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது அக்கா, அண்ணி கேரக்டர்களில் நடித்து வருகிறார். காஞ்சனா நேற்று முன்தினம் கோல்கட்டாவில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு நள்ளிரவில் காரில் தனியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டிவந்துள்ளார்.
ஒரு சிக்னலில் அவர் கார் நின்று கொண்டிருந்தபோது 3 இளைஞர்கள் குடிபோதையில் அவர் காரை மறித்தனர். அதில் ஒருவன் கார்சாவியை எடுத்துக் கொள்ள மற்ற இருவரும் காஞ்சானை காரில் இருந்து வெளியே இழுத்தனர். அவரை பலாத்காரம் செய்யும் நோக்கத்துடன் அருகில் உள்ள மறைவான இடத்துக்கு தள்ளிச் சென்றுள்ளனர். இதனால் நிலை குலைந்த காஞ்சனா உதவி கேட்டு சத்தம் போட்டுள்ளார். உடனே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒடி வந்தனர். இதை கண்டதும் அந்த இளைஞர்கள் காஞ்சனாவை கீழே தள்ளிவிட்டு ஓடிவிட்டனர்.
இது தொடர்பாக காஞ்சனா போலீசில் புகார் செய்தார். அவர் கூறிய அடையாளத்தின் அடிப்படையில் சங்கர் தவுலி, சூரஜித் பாண்டே ஆகிய இரண்டு இளைஞர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவாக இருக்கும் இன்னொரு இளைஞரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் கோல்கட்டாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.